அப்படிப்பட்ட வாழ்க்கைக்கு ஆசைப்பட்டும் கல்யாணம் செய்த நடிகர்கல்!! நேரம் பார்த்து மனைவியை கழட்டிவிட்ட விஜய்
நடிகர்களை பொறுத்தவரையில், சினிமாவை சார்ந்த பெண்களை திருமணம் செய்து கொள்வதை தவிர்த்துவிடுவார்கள். அப்படி திருமணம் செய்து கொண்டாலும் சினிமாவில் இருந்து விலகிவிட வேண்டும் என்று நடிகைகளிடம் கூறி கல்யாணத்தை முடித்துவிடுவார்கள். அதை ஒருசிலர் மட்டுமே செய்வதால் பலர் சினிமா சார்ந்திராதவர்களே திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்தவகையில் தங்களைவிட வசதி அதிகமான பெண்ணை கல்யாணம் செய்த நடிகர்கள் யார்யார் என்பதை பார்ப்போம்..
நடிகர் பிரபுவின் மகனும் சிவாஜி கணேசனின் பேரனுமான நடிகர் விக்ரம் பிரபு குடும்பத்தார் பார்த்து முடிவு செய்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். விக்ரம் பிரபுவின் மனைவி லட்சுமி, பிரபுவின் நெருங்கிய நண்பரின் மகளாம். அதிலும் சேலத்தில் மிகப்பெரிய தொழிலதிபராகவும் கல்லூரி மற்றும் பல நிறுவனங்களுக்கு அதிபரின் மகள் தானாம்.
நடிகர் தனுஷ் தன் குடும்பத்தைவிட பெரிய இடத்து பெண்ணான சூப்பர் ஸ்டார் ரஜினிகந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகளுக்கு பின் இருவரும் பிரிந்து விவாகரத்து பெறவுள்ளனர்.
விஜயகுமாரின் மகனான அருண் விஜய், ஆர்த்தி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் பார்த்து வைத்து திருமணம் செய்துள்ள அருண் விஜய் மனைவியின் அப்பா, தொழிலதிபராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
லண்டன் வாழ் தொழிலதிபரின் மகள் சங்கீதாவை தான் நடிகர் விஜய் திருமணம் செய்து இருக்கிறார். தான் சம்பாதிக்கும் சொத்தினை மாமனாரிடம் கொடுத்து இன்வெஸ்ட்மெண்ட்-டும் செய்து வருகிறார் விஜய். ஆனால் சில ஆண்டுகளாக விஜய், சங்கீதாவை விட்டு பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, தேன் ஆண்டாள் நிறுவனத்தின் மேலாளராவார். ஆர்த்தியின் தாய் சுஜாதா சின்னத்திரை சீரியல்களையும் ஒருசில படங்களையும் தயாரித்தும் வருகிறார். ஆர்த்தி குடும்பம் ஜெயம்ரவி குடும்பத்தைவிட அதிகளவு வசதியானவர்களாம்.
தன்னைவிட 17 வயது குறைவான நடிகை ஆயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆர்யா. சாயிஷாவின் குடும்பம் இந்தியாவிலேயே மிக முக்கிய கோடீஸ்வர்களில் ஒருவரக இருக்கிறாராம். சாயிஷாவின் அம்மா, அப்பா இருவரும் பாலிவுட் திரையுலகில் முக்கிய பிரபலங்களாக இருக்கிறார்கள்.
சூர்யாவை போல் காதல் திருமணம் செய்யவிடாமல் கார்த்தியை தான் பார்த்த பெண்ணை திருமணம் செய்து வைத்திருக்கிறார் நடிகர் சிவக்குமார். கார்த்தியின் மனைவி ரஞ்சனி ஈரோட்டை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரின் மகளாம். சிவக்குமார் குடும்பத்தை விட அதிக நிலம் மற்றும் பூர்வீக சொத்துக்கள் கொண்டவராம் கார்த்தி மனைவியின் தந்தை.