மனைவி, பிள்ளையை மிதித்துவிட்டு காதலிக்கு ரோஜா!! ஆர்த்தி ரவி அம்மாவின் இன்ஸ்டா ஸ்டோரி..
ஆர்த்தி ரவி அம்மா
நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தான் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்தரவை சமீபத்தில் பிறப்பித்து இருந்தது. அதாவது வழக்கு முடியும் வரை மாதம் 3 லட்சம் ஜீவனாம்சமாக ஆர்த்திக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ஆர்த்தி தனக்கு ரூ. 40 லட்சம் வேண்டும் என்று கேட்ட நிலையில் நீதிபதி இப்படியொரு உத்தரவிட்டுள்ளார். மேலும் மகன்களை ரவி மோகனை சந்திக்க அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

மனைவி, பிள்ளையை மிதித்து
இந்நிலையில் ஆர்த்தி ரவியின் தாய் சுஜாதா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரிகளை பகிர்ந்துள்ளார்.
ஒரு ஸ்டோரியில், ஒரு ரிலேஷன்ஷிப்பில் 3வது நபர் உள்ளே நுழையும்போது அது நாசமாகும் என்றும் மற்றொன்றில், நீ ஒரு மனைவியாக தோற்றதால் அவர் உன்னை ஏமாற்றவில்லை, அவர் ஆணாக தோற்றதால்தான் துரோகம் செய்தார் என்றும் மனைவி பிள்ளையை மிதித்துவிட்டு காதலிக்கு ரோஜா பூ கொடுக்கிறார் கணவர் என்றும் ஸ்டோரிகளை பகிர்ந்திருக்கிறார் சுஜாதா.
தன் மகளின் விவாகரத்தால் அம்மா சுஜாதா வேதனையில் இப்படியொரு கருத்துக்களை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.