மீண்டும் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து சர்ச்சை!! உறுதிப்படுத்திய நடிகர் அபிஷேக் பச்சன்..
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராய், கடந்த 2006ல் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே சல்மான் கான், விவேக் ஒபராய் போன்றவர்களுடன் காதலில் இருந்த ஐஸ்வர்யா ராய் தன்னைவிட 3வது குறைவான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து பெண் குழந்தையை பெற்றெடுத்தார். திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திவிட்டு தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்து பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக மிரட்டியிருக்கிறார்.
பல நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா ராய் தன் கணவருடன் ஜோடியாக கலந்து கொண்டு வந்தார். ஆனால் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அபிஷேக் பச்சன் மட்டுமே வந்துள்ளார்.
அமிதாப் பச்சனுடன் அபிஷேக் பச்சன் மட்டும் வந்ததையும் ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளாததையும் வைத்து இருவருக்கும் பிரச்சனை உண்மை தானா என்ற கேள்வி எழுந்து வருகிறது.
முன்னதாக கபடி லீக் போட்டிகளில் அவர்களது ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியின் மேட்ச் பார்க்க மும்பைக்கு ஒன்றாக இருவரும் சென்றிருந்தார்கள். ஆனாலும் இருவருமே தனித்தனியாக வசித்து வருகிறார்கள் என்றும் ஐஸ்வர்யா ராய் அவரது அம்மாவுடன் தான் வசித்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகியது.
ஐஸ்வர்யா ராய்-க்கு, மாமனார் அபிதாப் பச்சனுடன் புரிதல் இருப்பதாகவும் அவரது மாமியார் ஜெயா பச்சனால் தான் அபிஷேக் பச்சனுடனான விரிசலுக்கு காரணம் என்றும் பாலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாக இருக்கிறது.
இறுதியில் இருவரும் பிரிந்துவிடலாம் என்று முடிவை எடுத்து விட்டார்களா? இல்லையா என்று இன்றுவரை உறுதியாக தெரியவில்லை.