நிறைய பெண்களை காதலித்து இருக்கேன், எக்கச்சக்க டார்ச்சரை அனுபவித்தேன்!! நடிகர் மணிகண்டன் ஓபன் டாக்..
பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகர் மணிகண்டன். சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் தற்போது மகாராஜா படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்து இருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மணிகண்டன், பாய்ஸ் படத்துக்கு பிறகு காதல் FM, கிச்சா வயசு 16, யுகா படங்களில் நடித்தேன். யுகாவில் படத்தில் நடித்துகொண்டு இருக்கும் போது தான் என்னுடைய அப்பா இறந்துவிட்டார்.
அப்பா நிறைய கடன் வாங்கி வைத்து இருந்தார், நான் சம்பாதித்து வைத்து இருந்த பணத்தை வைத்து ஓரளவு கடன் அடைத்தேன.அந்த காலம் ரொம்ப கஷ்டமாக இருந்தது. என்னுடைய வாழ்க்கையில் நிறைய, கஷ்டம், துயரம், ஏமாற்றம், தோல்வி கிடைத்திருக்கிறது.
நான் நிறைய பேரை காதலித்திருக்கிறேன். இப்போது எனக்கு 42 வயதாகிவிட்டது நான் சரியாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. முகநூல் மூலமாக மலேசியா பெண் ஒருவர் என்னிடம் பேசி பழகினார்.
நான் மலேசியா சென்றுவிட்டேன், அந்த சமயத்தில் நான் எக்கச்சக்க டார்ச்சரை அனுபவித்தேன். அந்த பெண் எப்போதும் என்னிடம் பிரச்சனை செய்வார். எப்படியோ அங்கு இருந்து தப்பித்துவந்துவிட்டேன் என்று மணிகண்டன் கூறியுள்ளார்.