2ம் திருமணத்திற்கு ரெடியான ராமராஜன்.. பயில்வான் சொன்ன ஷாக்கிங் தகவல்!!
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் ஹீரோக்களில் ஒருவர் ராமராஜன். இவர் நடிப்பில் வெளிவந்த கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், ஊரு விட்டு ஊரு வந்து ஆகிய படங்கள் இன்னும் மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
ராமராஜன், நடிகை நளினி காதலித்து 1987ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு மகள் உள்ளார். 13 வருடங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் 2000ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், ராமராஜன் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், சொந்த வாழ்க்கையில் ராமராஜன் மிக பெரிய தவறு ஒன்றை செய்தார். ஜோசியத்தை நம்பி இரண்டாம் திருமணம் செய்யவிருந்தார்.
இந்த விஷயத்தை தனது காதல் மனைவி நளினி இடம் சொன்னதும், அப்படியா நீ சந்தோசமா இரு என்று சொல்லி நளினி அவரை பிரிந்து சென்றுவிட்டார். கடைசியில் இரண்டாம் திருமணமும் நடிக்கவில்லை. மனைவியும் பிரிந்துவிட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.