படவாய்ப்பு இல்லை!! சீரியல் பக்கம் தாவிய பிக்பாஸ் நடிகை அபிராமி..
மாடலிங் துறையில் இருந்து திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். நோடா படத்தில் சிறு ரோலில் நடித்த அபிராமி, களவு, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பின், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 56 நாட்கள் மட்டுமே இருந்து பின் வெளியேறினார்.
அதன்பின், ராக்கெட்ரி, வான் மூன்று, துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்தும் வந்தார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினையும் பெற்றார். ஒருசில விளம்பரங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் நடித்து வரும் அபிராமி சரியாக பட வாய்ப்பில்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வந்தார்.
தற்போது வாய்ப்ப்பில்லாமல் வேறுவழியின்றி சின்னத்திரை பக்கம் நுழைந்திருக்கிறார் அபிராமி. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் எமோஷ்னல் டிராமாவான வீரா என்ற தொடரில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் அபிராமி நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார்.
வீரா சீரியலில் நடிக்கவுள்ள திருமணத்தில் மணப்பெண் தோழி என்ற கேமியோ ரோலில் நடித்து வருகிறார் அபிராமி வெங்கடாசலம். இந்த ரோல் தொடர்ந்து இருக்குமா? இல்லை சில நாட்கள் மட்டும் தானா என்று கேள்வி எழுந்து வருகிறது.