கோடியில் கட்டிய பங்களா!!சீரியல் நடிகை ஆலியா மானசாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?
சின்னத்திரையில் இருந்து பிரபலமானவர்களில் ஒருவரான நடிகை ஆல்யா மானசா, 2017ல் வெளியான ஜூலியூம் நான்கு பேரும் என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமாகினார். அதன்பின் சின்னத்திரையில் ராஜா ராணி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
அதே சீரியலில் நடித்த நடிகர் சஞ்ஜீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்த ஆல்யா மானசா, இரு குழந்தைகளுக்கு தாயான பின்பும் சீரியலில் நடித்து வருகிறார். இனியா என்ற சன் டிவி சீரியலில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார்.
கடந்த 2022ல் துவங்கப்பட்ட இனியா சீரியலுக்கு ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் 20 ஆயிரம் முதம் 25 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறாராம். தற்போது அவரின் சம்பளம் ஒரு நாள் ஷூட்டிங்கிற்காக சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை சம்பளமாக பெற்று வருகிறார்.
அப்படி சம்பாதித்து தற்போது புது வீட்டினை கட்டி முடித்திருக்கிறார் ஆல்யா - சங்ஜீவ் தம்பதினர். சுமார் 1.8 கோடி மதிப்பில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளதாகவும் முழுக்க முழுக்க லோனில்தான் இந்த தொகையை கட்டியுள்ளதாகவும் பேட்டியொன்றில் ஆல்யா மான்சா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.