விபத்தால் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு.. கைவித்த டாக்டர்!! வேதனையை பகிர்ந்த சீரியல் நடிகை அஸ்ரிதா...

Star Vijay Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Edward Jun 06, 2024 06:15 AM GMT
Report

பொதுவாக சினிமா நடிகைகள் தான் படவாய்ப்புக்காக கவர்ச்சி காட்டுவார்கள். அதுவும் பட வாய்ப்புகள் எதுவும் கையில் இல்லை என்றால் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி புகைப்படங்கள் வெளியிடுவார்கள். அப்படி கவர்ச்சி காட்டியே புது பட வாய்ப்புகள் பெற்றவர்கள் பலர். அந்த பார்முலாவை தற்போது சீரியல் நடிகைகளும் கையில் எடுத்து இருக்கின்றனர்.

விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ராகினி என்ற ரோலில் நடித்து வருபவர் நடிகை அஸ்ரிதா. சீரியலில் அவர் ஹோம்லி தான். ஆனால் தற்போது அவர் திடீரென எல்லைமீறி கவர்ச்சி காட்ட தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கே அதிர்ச்சி ஆகி இருக்கிறது.

விபத்தால் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு.. கைவித்த டாக்டர்!! வேதனையை பகிர்ந்த சீரியல் நடிகை அஸ்ரிதா... | Actress Asritha About Accident And Painful Moments

இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் நடிகை அஸ்ரிதா. தனக்கு ஏற்பட்ட விபத்தால் மூளை நரம்பில் பாதுப்பு ஏற்பட்டு பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து போனதாகவும் அவ்வப்போது பழைய நினைவுகள் நியாபகம் வந்தாலும் அதை அதிகமாக யோசித்தால் தலை வலியில் அவதிப்பட்டதாகவும் அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் தன்னால் தானாக எழுந்து ரெஸ்ட் ரூமிற்கு கூட செல்லமுடியாத நிலையில் இருந்தேன். நடக்க கூட என்னால் முடியாது. எந்த சத்தத்தையும் கேட்க முடியாது. 10 சதவீதம் தான் உயிர் வாழ்வேன் என்று மருத்துவர்கள் கை விரித்துவிட்டனர். வாழ்க்கையை வெறுத்து போய்விட்டது.

விபத்தால் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு.. கைவித்த டாக்டர்!! வேதனையை பகிர்ந்த சீரியல் நடிகை அஸ்ரிதா... | Actress Asritha About Accident And Painful Moments

எப்போதும் மன உறுதியை நான் கைவிடவில்லை, என் தந்தையின் ஆசீர்வாதமும் மக்களின் அன்பும் தான் என்னை மீண்டும் நடிக்கும் அளவிற்கு கொண்டு வந்ததாகவும் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருப்பேன் என்று உணர்வதாக உருக்கத்துடன் நடிகை அஸ்ரிதா கூறியிருக்கிறார்.