ஷூட்டிங் போக பயப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு தண்ணிக்காட்டும் நடிகை..

covid19 tamilactress
By Edward Feb 10, 2022 05:24 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை கொரோனா காலக்கட்டத்திற்கு முன் மிகவும் பிஸியாக படப்பிடிப்பிலும் ஊர்சுற்றியும் வந்தார். கடந்த ஊரடங்கு சமயத்தில் அம்மணி சோம்பேறியாக மாறிவிட்டாராம்.

சமீபத்தில் நடிகைக்கு கோவிட் 19 வந்து படப்பிடிப்பிற்கு செல்லாமல் தள்ளிப்போட்டு வருகிறாராம். அதற்கு காரணத்தை கேட்டால் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக போகவில்லை எனக்கு மிகவும் பயமா இருக்கு என்று கூறி சமாளித்து வருகிறாராம்.

ஆனால் பேட்டி மட்டும் எங்க இருந்து கொடுக்கிறார் என்பதே தெரியவில்லையாம். இப்படி தயாரிப்பாளர்கள் காசு போட்டு கோடியில் சம்பளம் கொடுத்தால் இப்படியா தண்ணிக்காட்டுவது.