40 வயதில் வாய்ப்பே இல்லை! அந்தமாதிரி காட்சியால் விவாகரத்து வரை சென்ற நடிகை!
தமிழ் சினிமாவில் வட இந்திய நடிகைகளின் வருகை அதிகரித்து வருவதை நம்மால் பார்க்க முடியும். அப்படி தற்போதைய முன்னணி நடிகர்களின் ஆரம்பகாலகட்டத்தில் இருந்தே ஆரம்பித்து தற்போது எதுக்கு எடுத்தாலும் தமிழ் பேசும் நடிகைகளை விட்டுவிட்டு மற்ற மொழி நடிகைகளை புக் செய்கிறார்கள். அப்படி நடிகர் மாதவனின் மின்னலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ரீமா சென்.
முதல் படமே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாகினார். கடைசியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கே எண்ட்கார்ட் கொடுத்தார்.பின் ஷிவ் கரண் சிங் என்பவரை 2012ல் திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார்.
திருமணத்திற்கு முன்பே Gangs of Wasseypur முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்த ரீமாசென்னை பலர் விமர்சித்ததால் அவரை திருமணம் செய்ய தயங்கினார்.
ஆனால் திருமணத்திற்கு பின் அப்படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகவே விவாகரத்து முடிவில் இருந்துள்ளார் கணவர் ஷிவ்.