இதனால் தான் உறவில் பிரிவு ஏற்பட்டது!! 55 வயதான கௌதமி ஓபன் டாக்..
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்து இளைஞர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை கௌதமி.
தமிழ் சினிமாவில் பிஸி நடிகையாக இருந்த கௌதமி 1998 -ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். தற்போது கௌதமி, தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கௌதமி, உண்மையில் உங்களுடைய பலம் வேற யாரும் இல்லை அது நீங்கள் தான். ஒரு ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் இருக்கும் போது அந்த அந்த ரிலேஷன்ஷிப் சரிவர ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால், அதற்கான எல்லா பொறுப்பையும் நீங்கள் எடுக்க தேவை இல்லை".
அப்பா, அம்மா, மகள், கணவர் காதலர் என எந்த விதமான ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் அதற்கு இடையே ஒரு மையப் புள்ளி ஆனது கண்டிப்பாக இருக்கும். இரண்டு பேர் இருக்கும் ரிலேஷன்ஷிப்பில் 50 % தாண்ட கூடாது. இருவரும் சமமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் அந்த உறவு நீடிக்காது" என்று கௌதமி கூறியுள்ளார்.