அந்த நாளை என் வாழ்கையில் மறக்க முடியாது.. வேதனையில் கதறிய விஜய் பட நடிகை..
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக இருந்தவர் நடிகை இலியானா. தமிழில் லேடி படத்தில் நடித்து பிரபலமான இலியானா பல ஆண்டுகளாக தமிழில் வாய்ப்பில்லாமல் இந்தி பக்கம் போனார். அதன்பின் விஜய்யின் நண்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
பின், சில வருடம் திரைப்படங்களில் தலைகாட்டாமல் இருந்த அவர் திடீரென வெளிநாட்டை சேர்ந்த மைக்கேல் டவுன்லோட் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து சில வருடத்திற்கு முன் குழந்தையும் பெற்றெடுத்தார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், என் கணவர் எனக்கு கிடைத்த வரம் என்றும் என்னை நன்றாக புரிந்து கொள்ளும் மனிதர், கஷ்டத்தில் துணை நிற்கும் மனிதர் என்றும் தெரிவித்துள்ளார். நான் கர்ப்பமாக இருக்கும் போது என்னுடன் துணையாக இருந்தார். அப்போது எனக்கு மிகவும் மன அழுத்தம் ஏற்பட்டது. டெலிவரி ஆனப்பின் என்னை கண்ணின் இமைப்பொல் பார்த்துக்கொண்டார். அந்த நாளை என் வாழ்க்கையில் மறக்கமுடியாது.
இப்படி இருக்கும் போது சமூகவலைத்தளங்களில் எங்களை பற்றி மோசமாக பேசுவது வேதனையை அளித்தாலும், நான் கண்டுகொள்ள மாட்டேன். ஆனால் என் கணவர் குடும்பத்தை பற்றி கேவலமாக பேசுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர் அன்பானவர். நான் நடித்த படங்களின் பாடல்களை அவர் பாடுவார் என்று உருக்கமாக பேசி இருக்கிறார். நடிகை இலியானா.