சிம்பு பட நடிகைக்கு என்ன ஆச்சு.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
தமிழில் 2011ஆம் ஆண்டு வெளிவந்த வானம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஜாஸ்மின் பாஷின். இவர் கடந்த ஜூலை 17ஆம் தேதி டெல்லியில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர்.
அப்போது கண்ணில் காண்டாக்ட் லென்ஸ் போட்டிருந்த நிலையில், கண்களில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதால் பொறுத்துக்கொண்டு கூலிங் க்ளாஸ் அணிந்துகொண்டு ரேம்ப் வாக் செய்து இருக்கிறார்.
கண்பார்வை பறிபோய் எதுவுமே பார்க்க முடியாத நிலையில் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் உதவி செய்தார்களாம். ஆனால், கண்பார்வை பறிபோன நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
மருத்துவர்கள் சோதித்த போது அவருக்கு corneal damage ஏற்பட்டு இருக்கிறது என சொல்லி இரண்டு கண்களுக்கும் கட்டு போட்டுவிட்டார்கள். தற்போது மும்பைக்கு வந்து சிகிச்சையை தொடர்ந்து வருகிறேன். இப்போது கண்பார்வை சரியாகி வருகிறது என ஜாஸ்மின் பாஸின் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..