ஐட்டம் டான்ஸ்-கு ஆடுனவங்க கையில வாங்குன அவார்ட்.. முகம் சுளித்த சீரியல் நடிகை பிரமி வெங்கட்
90-ஸ் காலக்கட்டத்தில் கவர்ச்சி குயினாக திகழ்ந்து மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வந்தவர் நடிகை விசித்ரா. இடையில் சில காரணங்களால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதன்பின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். நிகழ்ச்சியில் சினிமாவில் இருந்து விலக காரணம் என்ற உண்மையை பகிர்ந்திருந்தார்.
ஒரு படத்தில் நடிக்கும் போது டாப் ஹீரோ என்னை ரூமிற்கு அழைத்ததாகவும் அதற்கு யாரும் எனக்கு ஆதரவாக பேசவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த விசயம் இணையத்தில் சினிமாத்துறையிலும் பெரியளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் சின்னத்திரை சீரியல் நடிகை பிரமி வெங்கட் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகை விசித்ரா பற்றி ஓப்பனாக பேசியிருக்கிறார். சன் தொலைக்காட்சியில் கண்மணி சீரியலுக்கான சிறந்த வில்லி விருது எனக்கு கொடுக்கப்பட்டது. விருதினை விசித்ரா தான் கொடுத்தார்கள். ஆனால், அவர் கொடுத்தது எனக்கு சின்ன வருத்தம் இருந்தது.
மேடம் (விசித்ரா) நிறைய ஐட்டம் சாங்ஸ் தானே ஆடியிருக்கிறார்கள். ரொம்ப கிளாமரஸ்ட் நடிகை, இப்போது அவர்கள் சீரியல் பண்ணலாம், ஆனாலும் அது எனக்கு முதல் விருது. அவர் எனக்கு கொடுக்கும் போது சின்ன நெருடல் எனக்கு இருந்தது.
வேறு யாராவது கொடுத்திருக்கலாம் என்ற சின்ன நெருடலும் இன்றுவரை இருந்தது, அதனால் தான் நேர்மையாக கூறுகிறேன். எனக்கு மட்டும் அவர் கிளாமர் நடிகைன்னு இல்லை, அவரை பார்க்கும் பலருக்கும் அப்படிதான் தோண்றியது. ஆனால் அதை விசித்ரா உடைத்துவிட்டார்கள். பிக்பாஸில் அவர்களை பார்த்த பின் அப்படியே மாற்றிவிட்டதாக பிரமி வெங்கட் தெரிவித்திருக்கிறார்.