அட்ஜெஸ்ட்மெண்ட் செஞ்சியான்னு கேட்ட நடிகையை வெளுத்து வாங்கிய சீரியல் நடிகை பானுமதி..
சின்னத்திரை சீரியல் நடிகைகள் சமீபகாலமாக வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்லி கூப்பிடுகிறார்கள் என்று ஓப்பனாக பேசி வருகிறார்கள். அந்தவகையில் சீரியல் நடிகை ரிஹானா யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பல விஷயங்களை கூறி ஷாக் கொடுத்தார். தற்போது சின்ன மருமகள் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வரும் நடிகை பானுமதியை ரிஹானா பல கேள்விகளை கேட்டிருக்கிறார். அதற்கு சரியான பதிலடி கொடுத்து ரிஹானாவை வெளுத்தும் வாங்கியிருக்கிறார் நடிகை பானுமதி.
அந்த பேட்டியில் சினிமாவில் நடிக்க விருப்பப்பட்டு வரவில்லை. சாப்பிட ஏதாவது ஒரு வேலை சாப்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக நடிக்க வந்தேன். ஜீனியர் நடிகையாக 500 ரூபாய் சம்பத்திற்கு வேலை பார்த்து பின் பல சீரியல்களில் நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து நீங்கள் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு சென்று இருக்கிறீர்களா என்று ரிஹானா, பானுமதியை பார்த்து கேட்டிருக்கிறார்.
அதற்கு பானுமதி, நான் இந்த கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை. பதில் சொல்வதால் இந்த துறை மாறப்போவதில்லை, ரிஹானா இந்த கேள்வியை கேட்பதால் இது மாறப்போவதில்லை. ஏன் என்றால் எனக்குள்ளும் மீரா மிதுன், வனிதா விஜயகுமார் இருக்கிறார்கள். நான் பானுமதியாக வெளியில் தெரிய விரும்புகிறேன். அவன் கூப்பிட்டான், இவன் கூப்பிட்டான் என்று சொல்வதால் இந்த துறை மாறப்போவதில்லை.
அப்படி இருக்கும் போது எல்லா நடிகைகளிடமும் ஏன் இந்த கேள்வியை கேட்குறீங்க? இந்த கேள்வியை ஷோவின் இயக்குனர் கேட்கச் சொல்கிறார் என்பதற்காக நீ எப்படி இந்த கேள்வியை கேட்கலாம், நீயும் ஒரு பெண், நானும் ஒரு பெண். அப்படி இருக்கும் போது இந்த கேள்வியை கேட்பது தப்பு என்று தெரியவில்லையா? இதனால் தான் ஒட்டுமொத்த மீடியாவும் கெட்டுப்போய் இருக்கிறது. அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசினால்தான் நான் பிரபலமாக வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.
நீங்கள் (ரிஹானா) அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசி பிரபலமாகி இருக்கலாம், அதற்காக நான் பதில் சொல்ல வேண்டுமா? சமூகத்தை சீர்திருத்த வந்த ரிஹானா இப்படி கேட்கலாமா? இத்தனை கேமரா முன்னாடி, இத்தனை பேர் முன்னாடி ஒரு பெண்ணின் கேரக்டரை அசிங்கப்படுத்தும் கேள்வியை ஏன் கேட்க வேண்டும் என்று ரிஹானாவை சரமாரியாக கேள்விகேட்டு அமைதியடை செய்தார்.
பின், எத்தனையோ பேரின் பேப்பரை கையில் எடுத்த ரிஹானாவின் பேப்பரை நான் கையில் எடுக்கட்டுமா? எல்லாமே கேமராவுக்காக சொல்லும் பொய், அப்படித்தான் கேமரா முன்னாடி நீங்க அமர்ந்து பல பொய்களை பேசி பிரபலமாகி இருக்கீங்க என்றும் நான் பேச ஆரம்பித்தால் யாரும் தாங்கமாட்டீர்கள் என்றும் வெளுத்து வாங்கியபடி பானுமதி பேசியிருக்கிறார். இதற்கு ரிஹானா என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தபடி இருந்திருக்கிறார்.