4 வருஷமாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு.. விவாகரத்து கொடுக்காத கணவர்!! மறுப்பக்கத்தை கூறிய நடிகை சம்யுக்தா..
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 -ல் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் சம்யுக்தா. இவர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான வாரிசு படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சம்யுக்தா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
கொரோனா பரவல் காலக்கட்டத்தில் என்னுடைய கணவர் துபாயில் வேறொரு பெண்ணுடன் 4 வருடமாக உறவில் இருந்துள்ளார் என்பது எனக்கு தெரிய வந்தது. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியவில்லை. இதயம் உடைந்து போய் இருந்தேன்.
கோவிட் என்பதால் வெளியில் எங்கும் செல்லவில்லை, எதுவும் பண்ணமுடியவில்லை. வேறொரு பெண்ணுடன் அவரே சென்றுவிட்டார். அதை எப்படி நான் தடுக்க முடியும். யாராவது, வேறொரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தால், உங்களை வேறுமாதிரி மோசமாக நடத்துவார்கள்.
அதுதான் முதல் அறிகுறியாக இருக்கும். எதுக்கு தேவையில்லாமல் கோபப்படுகிறாங்க, முரட்டுத்தனமாக இருக்காங்கன்னு தெரியும் போது தான் அதை உணர்ந்தேன். 4 வருஷமா எனக்கு தெரியவே இல்லை.
இதை பாவனாவிடம் கூறிய போது பிக்பாஸ் போன்னு சிபாரிசு செய்து அனுப்பினார். மகனுக்கு ஒரு அப்பா தேவை என்று வரும் போது இரண்டாம் திருமணம் செய்து கொள்ளலாமே என்று தொகுப்பாளர் கேட்டதற்கு, இந்த திருமணத்தின் சட்டப்பூர்வமான வேலையே இன்னும் முடியவில்லை.
அவர் வரவில்லை, அவரை கூப்பிட்டும் பார்த்துவிட்டோம், அவர் வராமல் இருக்கிறார், அதனால் தன் துணையை தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று எமோஷ்னலாக பகிர்ந்துள்ளார் நடிகை சம்யுக்தா ஷான்.