திருமணமாகி 2 மாதங்கள் தான்! சோபிதா எடுத்த அதிரடி முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்
நாகசைதன்யா
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் ஆவார்.
நாகசைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
பின் நடிகை சோபிதாவை காதலித்து வந்த நாகசைதன்யா, கடந்த ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்திற்கு பின், சோபிதாவை ட்ரோல் செய்து பலர் வலம் வந்தனர்.
அதிரடி முடிவு
இந்நிலையில், சோபிதா துலிபாலாவின் தோற்றங்கள் மற்றும் அவர் வெளியிடும் புகைப்படங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் உலா வருகிறது.
அதாவது, திருமணத்துக்கு முன் தாராளமான மாடர்ன் உடையில் திரையில் தோன்றிய ஷோபிதா இனி அப்படியான வேடங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளாராம்.
அதிலும் குறிப்பாக நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்க மாட்டார் என சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.