ஒரு வருடத்தில் முடிந்த திருமண வாழ்க்கை! நடிகை சுகன்யாவின் மகளா இது?
90-களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சுகன்யா. 22 வயதில் சினிமாவில் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார். சுகன்யாவுக்கு 52 வயதை எட்டியுள்ள நிலையில், சுகன்யாவின் திருமண வாழ்க்கை எதற்காக பிரிந்தது என்பது குறித்து தகவல் தற்போது கிடைத்துள்ளது.
சீரியலிலும் சினிமாவிலும் அவர் இரவு பகல் பாராமல் நடித்து வந்துள்ளார். 2002 ல் ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்த சுகன்யா ஒரே வருடத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2003ல் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார். அதற்கான காரணம் என்ன என்று சில கிசுகிசுக்கள் ஓடிக்கொண்டிருந்தது அந்த நேரத்தில்.
விவாகரத்திற்கு பின், அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. நடிகை சுகன்யா ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியின் வசம் இருந்ததாக பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதில் அமைச்சராக இருந்த ஒருவர் சுகன்யாவை அரவணைப்பில் வைத்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
ஒரு மகளுடன் அமெரிக்காவில் செட்டிலாகி இருந்த சுகந்தா மகள் புகைப்படங்கள் எதையும் வெளியில் தெரியாமல் பார்த்து கொண்டு வந்தார். தற்போது சுகன்யாவின் மகள் புகைப்படம் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.



