திடீரென தனது வீடுகளை அடமானம் போட்ட தமன்னா... என்ன பிரச்சனை
நடிகை தமன்னா
மொழி தெரியவில்லை என்றாலும் தென்னிந்தியாவில் நிறைய படங்கள் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர். மொழி தெரியாமல் நடிக்க வந்தவர் இப்போது நன்றாகவே தென்னிந்திய மொழிகளில் பேச கற்றிருக்கிறார்.
கடைசியாக தமிழில் அவரது நடிப்பில் அரண்மனை 4 படம் வெளியாகி இருந்தது, அவரது நடிப்பிற்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது.
இந்த நிலையில் நடிகை தமன்னா தான் ஆசை ஆசையாக வாங்கிய வீடுகளை அடமானம் போட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை அந்தேரி வீர தேசாய் சாலையில் இருக்கும் 3 அபார்ட்மென்ட்டுகளை இந்தியன் வங்கியில் ரூ. 7.84 கோடிக்கு அடமானம் வைத்திருக்கிறாராம். அதற்காக ரூ. 4.7 லட்சம் ஸ்டாம்ப் டியூட்டி கட்டியிருக்கிறார்.
அதேசமயம் ஜுஹு பகுதியில் வணிக வளாகம் ஒன்றை 5 ஆண்டுகளுக்கு லீஸ் எடுத்திருக்கிறாராம். ரூ. 18 லட்சம் மாத வாடகையாம். ஜுன் 27ம் தேதி தான் அந்த இடத்தை லீசுக்கு எடுத்திருக்கிறார் தமன்னா.
சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை தொழிலில் போட்டு சம்பாதிக்கும் பிரபலங்கள் மத்தியில் தமன்னாவும் புதிய பிசினஸிற்காக லீசுக்கு இடத்தை வாங்கி இருப்பது தெரிகிறது.