கர்ப்பமாக இருக்கும் போது கணவர்.. முதல் பையன் அதனால் தான் இறந்துபோனான்!! நடிகை ரேஷ்மாவின் மறுபக்கம்..
ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இரு திருமணம் செய்து அவர்களால் ஏமாற்றமடைந்து இந்தியா பக்கம் தன் மகனுடன் வசித்து வருகிறார் ரேஷ்மா. பல படங்களில் நடித்துள்ள ரேஷ்மாவுக்கு புஷ்பா கேரக்டர் மிகவும் பெரியளவில் பிரபலப்படுத்தியது. பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி, சீதா ராமன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, 39 வயதாகியும் குறையாக கிளாமர் லுக்கில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், வாழ்க்கையில் மனது உடைந்து அழுத நாள் எப்போது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரேஷ்மா, எனக்கு உடல்ரீதியாக பாதிப்படைந்ததே ரிலேஷன்ஷிப்பால் தான். நல்லா இருந்தது, ஆனால், அவர் பாக்ஸிங் இருந்தால் தெரியாமல் என்னை அடிப்பார்.
ஒருநாள் நான் கர்ப்பமாக இருக்கும் போது கோபத்தில் என்னை அடித்தபோது வயிற்றில் இருந்து குழந்தை பாதி வெளியே வந்துவிட்டது. அவன் அப்படியே ஓடிவிட்டான். நானே கார் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு கஷ்டப்பட்டு ஓட்டிச்சென்றேன். அதன்பின் மருத்துவமனையில் சேர்ந்து 4 மாதத்திற்கு மேல் என் மகன் ராகுல் பிறந்தான். பிறந்து 9 மாதம் வரை இன்குபேட்டரில் தான் இருந்தான்.
அதன்பின், இந்த போராட்டத்தை தனியாக என்னை சமாளிக்க முடியவில்லை என்று அம்மா, அப்பாவிற்காக அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்துவிட்டேன். மகன் பிறந்ததும் எனக்கு இரு முழுமையான வாழ்க்கையும் சவாலான வாழ்க்கையும் தனியாக இருந்ததால் இருந்தது. அவனுக்காக பல மருத்துவமனைகளை பார்த்து என் பையனை சரி செய்திருக்கிறேன்.
அந்த ரிலேஷன்ஷிப்பிற்கு முன்னாடி எனக்கு ஒரு பையன் பிறந்து இறந்துவிட்டான், அது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. இவனுக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில் வளர்த்தேன். முதல் பையன் இறக்க, அவனுடைய இதயம் நின்று போய்விட்டது, எதற்கு அப்படியானது என்று தெரியவில்லை என்று எமோஷ்னலாக பேசியிருக்கிறார் நடிகை ரேஷ்மா.
You May Like This Video