பாலிவுட் போனதும் இப்படியா!! மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் நடிகை ஜோதிகா
90-ஸ் காலக்கட்டத்தில் மும்பையில் இருந்து தென்னிந்திய பக்கம் வந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து குறுகிய காலக்கட்டத்தில் டாப் நடிகையாக மாறியவர் நடிகை ஜோதிகா. ஆரம்பத்தில் நடிகர் சூர்யாவுடன் காதலில் இருந்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரின் காதலையும் ஆரம்பத்தில் சூர்யா தந்தை நடிகர் சிவக்குமார் மறுத்திருந்தார்.
தன் சாதி பெண்ணை தான் சூர்யாவுக்கு கட்டிக்கொடுக்க திட்டமிட்டிருந்தது தான் அதற்கு காரணம். ஆனால் சூர்யாவின் அடம்பிடிப்பால் இருவரும் திருமணத்தையும் முடித்து வைத்திருக்கிறார். அதோடு நடிகை ஜோதிகாவை சினிமாவில் நடிக்க வேண்டாம் என்றும் கூறியதாக தகவல் வெளியானது.
தற்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கி பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். அஜய் தேவ்கன், மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள சைத்தான் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதிலும் வெளியான முதல் நாளில் 14.2 கோடி வசூலை வசூலித்திருக்கிறது. பாலிவுட்டில் பல ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்த ஜோதிகாவை தற்போது பாலிவுட் வட்டாரமே கொண்டாடி வருகிறார்கள்.



