காதல் முறிவுக்கு பின் தமன்னாவுக்கு இப்படி ஒரு நிலையா? உருக்கமாக இன்ஸ்டாவில் போட்ட பதிவு
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தமிழில் வெளிவந்த கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கல்லூரி, சுறா, படிக்காதவன், வீரம், அயன் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
ஹீரோயினாக படங்களில் நடிப்பதை விட ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாளா பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார். ஆனால், இவர்கள் இருவரும் தங்களது காதலை சமீபத்தில் முறித்துக்கொண்டனர். இவர்களுடைய பிரேக்அப்பிற்கு என்ன காரணம் என தெரியவில்லை.
இந்த நிலையில், தற்போது இன்ஸ்டாவில் சில போட்டோக்களை பதிவிட்டு இருக்கும் நடிகை தமன்னா, தான் figuring-it-out phaseல் இருப்பதாக கூறி இருக்கிறார். என்ன நடக்கிறது என புரிந்துகொள்ள முயற்சிக்கும் தருணத்தில் தான் இருப்பதாக கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமன்னா வெளியிட்டுள்ள முழுமையான பதிவில், "This is the figuring-it-out phase. The phase where you’re half designer, half detective. Where every detail matters, and every misstep teaches. Where ideas live on sticky notes. It’s not perfect (yet). But it’s on its way. And honestly, that’s the magic. Behind every shiny thing is a not-so-shiny process. Decisions and doubts. This is that part. The nerdy, chaotic, the exciting middle" என பதிவு சேட்டுள்ளார்.