இந்த சமூகத்தில் வாழ அருவருப்பாக இருக்கிறது!! வதந்திகளால் வேதனைப்படும் நடிகை ஐஸ்வர்யா ராய்..
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் பிரமாண்டமாக சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்தது. இதில் பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த திருமணத்தில் சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் தனித்தனியாக கலந்து கொண்டனர். அங்கு சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் இருவரும் கைகோர்த்து போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
முன்னாள் காதலர்களான சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் போன்ற வதந்திங்கள் சமூக வலைத்தளங்களில் வர தொடங்கியது. ஆனால் அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று கூறி வருகிறார்கள்.
இதனை அறிந்த நடிகை ஐஸ்வர்யா ராய், எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது. திருமணமான அதுவும் ஒரு பெண்ணுக்கு தாயாக இருக்கும் ஒரு பெண்ணை இப்படியா பேசுவது. புரளியை கிளப்பும் இந்த சமூகத்தில் வாழ்வதற்கே அருவருப்பாக இருக்கிறது என்று வேதனைப்பட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.
