விவாகரத்து சர்ச்சை.. நடிகை ஐஸ்வர்யா ராய் எடுத்த அதிரடி முடிவு..
உலக அழகி பட்டம் வென்று பின் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வந்த இவர், தமிழில் சினிமா திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
ஆனால், இவர் தமிழில் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரத்யா எனும் மகள் இருக்கிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் விவாகரத்து பெற போகிறார்கள் என்று அடிக்கடி சர்ச்சைகள் வந்து கொண்டிருந்த நிலையில், இதுகுறித்து ஒரு பேட்டியில் அபிஷேக் மறுத்திருந்தார்.
ஆனால், திருமணத்தின்போது போடப்பட்ட மோதிரம் ஐஸ்வர்யா ராயின் கைகளில் இல்லாததால் மீண்டும் இதுகுறித்து சர்ச்சை எழுந்தது. தற்போது, இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யாவின் கைகளில் அந்த மோதிரம் இருந்திருக்கிறது.
இதன்மூலம் ஐஸ்வர்யா தனக்கு விவகாரத்து எல்லாம் நடக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது.