திருமணம் செய்து குழந்தை பெத்துக்கனும்!! இலங்கை அமைச்சருக்கு ஐஸ் வைத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக அவர் நடித்த படங்களில் பெரியளவில் வெற்றிப்பெறவில்லை. இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இலங்கைக்கு சென்றிருக்கிறார்.
அங்கு நுவ்ரெலியா நகரில் இருக்கும் ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருக்கிறார். அவருடன் நடிகை சம்யுக்தா ஷான், ஐஸ்வர்யா தத்தா, மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டவர்களும் சிறப்பு விருந்தினராக சென்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், கூட்டத்தில் ஒருவரை பிடித்திருக்கிறது, அவரை சென்னை அழைத்து போய்விடவா? மஞ்சள் நிற ஆடை போட்டு ஆட்டம் போட்டவர், யார் சாமீ நீ என்று கூறியிருக்கிறார். மேலும், அமைச்சர் கூப்பிட்டு இருக்கிறார் என்று சொன்னார்கள் நானோ ஜீவன் தொண்டைமான் வயசானவர் என்று நினைத்தேன்.
இந்த மனுஷன் என்னையா, யாருய்யா இந்த மனுஷன். பார்த்தா குட்டியா, ஸ்மார்ட்டா, செம அழகா இருக்காரு. ஆனால் இந்த மாதிரி ஒரு மினிஸ்டர் கிடைக்க நாம குடுத்து வெச்சிருக்க வேண்டும். உலகிலேயே இளமையான அமைச்சர் இவர்தான். காக்கா முட்டை படத்தில் நடித்தேன். பத்துக்கு பத்து வீட்டில் நடிச்ச போது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், இங்கே இருக்கும் மக்கள் எட்டுக்கு எட்டு வீட்டில் வசிக்கிறார்கள்.
இந்த மாதிரி மினிஸ்டர் எங்க ஊரில் இல்லையே என்று கூறியிருக்கிறார். இங்கே இருக்கும் பெரியவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், 18 வயதில் கல்யாணம் பண்ணிக்கனும், குழந்தை பெத்துக்கனும் வீட்டை பார்த்துக்கனும்.
எனக்கு திருமணம் செய்து குழந்தை பெத்துக்னும் என்ற ஆசை இருக்கிறது என்று ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பனாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி ஐஸ்வர்யா ராஜேஷை கிண்டல் செய்து வருகிறார்கள்.
You May Like This Video