ஐஸ்வர்யா -தனுஷ் விவாகரத்துக்கு இந்த இரண்டு நடிகைகள் தான் காரணமா!! மேடையில் உளறிய பிரபல நடிகை..
தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 18 ஆண்டுகளுக்கு பின் பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்தார். அதற்காக கடந்த 2022 ஜனவரி 17 ஆம் தேதி இருவரும் அறிக்கை மூலம் தனித்து வாழ்வதாக தெரிவித்தனர். அதை அறிவித்த 2 ஆண்டுகளுக்கு பின் தனுஷ் - ஐஸ்வர்யா சட்டப்படி விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இருவரும் இணைந்துவிடுவார்கள் என்று பலர் எதிர்பார்த்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றது பலருக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.
இந்நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து பெற காரணம் பல கூறப்பட்டு வந்த நிலையில், பிரபல நடிகை ஒருவர் மேடையில் தனுஷ் பற்றி உளறிய விசயம் தற்போது வைரலாகி வருகிறது.
தனுஷுடன் வடசென்னை படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கனா படத்தின் நிகழ்ச்சியில், மேடையில் சில நடிகைகளின் பெயரை கூறியது பெரியளவில் அப்போதே பேசப்பட்டது. மேடையில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், இப்படம் முடிந்தப்பின் பெரிய ஹீரோ ஆவீங்க. என்னுடன் தனுஷ் ஜோடி சேர்ந்து நடிப்பீங்களா என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்டுக் கொண்டாராம்.
ஆனால் அதற்கு தனுஷ், ”உன் கூடவா ஐய்யய்யே? நோ வே” என்று இழுத்து சில நடிகைகளுடன் தான் நடிப்பேன் என்று கூறியிருந்தாராம். அந்த நடிகைகளில் பெயரையும் ஐஸ்வர்யா கனா படத்தின் ஆடியோ லான்சில் அவர் முன்பே கூறியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷிடம், அமலா பால், நயன்தாராவுடன் நடிப்பேன் என்று கூறியுள்ளார் தனுஷ். இந்த விசயமும் தற்போது பெரியளவில் பேசப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..
You May Like This Video