படு தோல்வி அடைந்த லால் சலாம்.. அப்பா தலையில் கட்டிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!! என்ன சொன்னார் தெரியுமா?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் வெளியானது. இப்படம் உண்மை சம்பவம் என்பதாலும் படத்தில் ரஜினிகாந்த் முக்கியமான ரோலில் நடித்ததாலும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
ஆனால் படம் படு தோல்வியை சந்தித்து. ரஜினிகாந்தின் சொந்த ஊரான கர்நாடகாவில் கூட இப்படம் படு தோல்வியை அடைந்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் படம் தோல்வி அடைந்தது பற்றி பேசியிருக்கிறார்.
அதில் அவர், என்னுடைய கதையில் இடைவேளைக்கு பிறகுதான் மொய்தீன் பாய் ரோல் இருந்தது. ஆனால் கமர்சியலுக்காக சூப்பர் ஸ்டாரை முன்பே காட்ட வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டது. அதனால் கடைசி நேரத்தில் மொய்தீன் பாய் காட்சிகளை பர்ஸ்ட் ஆப்பில் வைத்தோம். இது தான் நான் செய்த பெரிய தவறு என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.