சைலெண்ட்-ஆக ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா செய்த செயல்..

Rajinikanth Aishwarya Rajinikanth Tamil Directors
By Edward Sep 14, 2024 06:35 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளா 3 என்ற படத்தினை இயக்கி இயக்குநராக அறிமுகமாகினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களை இயக்கி வந்த ஐஸ்வர்யா, கணவரை விவாகரத்து செய்து லால் சலாம் என்ற படத்தினை இயக்கினார்.

சைலெண்ட்-ஆக ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா செய்த செயல்.. | Aishwarya Rajinikanth Fund Directors Association

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. தற்போது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி சைக்கிளிங் போன்றவற்றை செய்து வரும் ஐஸ்வர்யா, இயக்குநர் சங்கத்தின் பொறுப்பாளர்களை சந்தித்துள்ளார்.

இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் தங்களது குழந்தைகளின் கல்வி செலவுக்கு கஷ்டப்படுவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கேள்விப்பட்டுள்ளார். இதனையடுத்து இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்களை அழைத்து வருடம் தோறும் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்திருந்தார்.

சைலெண்ட்-ஆக ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா செய்த செயல்.. | Aishwarya Rajinikanth Fund Directors Association

தற்போது இயக்குநர் சங்கர்த்தின் தலைவர் ஆர். வி. உதயகுமாரிடம் 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை ஐஸ்வர்யா கொடுத்துள்ளார்.

இதனை பொருளாளர் சரண் , பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர். நிர்வாகிகள் இயக்குனர்கள் எழில், சி. ரங்கநாதன், மித்ரன் ஜவகர், எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஐஸ்வர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.