விவாகரத்துக்கு பின் கங்குலியுடன் சந்திப்பு! ரூட்டை மாற்றிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
18 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் தனுஷை விவாகரத்து செய்துள்ளதாக கடந்த ஜனவரி 17 ஆம் தேதி இருவரும் அறிக்கை மூலம் அறிவித்தனர். ஐஸ்வர்யா, தனுஷை சேர்த்து வைக்க ரஜினிகாந்த் உட்பட பலர் முயற்சி செய்தும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
பின் படங்களில் கவனம் செலுத்திய தனுஷ் கிடைக்கும் நேரத்தில் இரு மகன்களுடன் நேரத்தினையும் செலவிட்டு வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தன் பங்கிற்கு இயக்கத்தில் அதிக கவனமும் உடற்பயிற்சி, சைக்கிளிங் என பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா பிசிசிஐ தலைவரான சவுரங் கங்குலியை சந்தித்து பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவரது வரலாற்றை இயக்கப்போவதாகவும் அதில் ஐஸ்வர்யா ஆர்வமாக இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்களாம்.
தோனி, கபில் தேவ் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டதை அடுத்து தாதா என அறியப்படும் கங்குலியின் வரலாறை படமாக்க விரும்புவதாக தெரியவருகிறது. ஏற்கனவே பாலிவுட் படத்தினை இயக்கவுள்ள நிலையில் இந்த சந்திப்பு ஐஸ்வர்யாவின் வருங்கால வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமையும் என்கிறார்கள்.