60 கோடி பட்ஜெட் துண்டப்போட்ட தயாரிப்பாளர்.. காரணமே இதுதான்!! சமாளிக்கும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனுஷை பிரிந்தப்பின் இயக்கத்தில் ஈடுபட ஆரம்பித்து லால் சலாம் படத்தினை இயக்கினார். அப்படத்தில் தன் தந்தை ரஜினிகாந்தை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்திருந்தார். படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் வசூல் 15 கோடிக்கள் மட்டுமே வசூலித்து படுமோசமான நஷ்டத்தை சந்தித்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா பேட்டியொன்றில் லால் சலாம் படத்தின் தோல்விக்கான காரணத்தை பகிர்ந்திருக்கிறார். படத்தின் 21 நாட்கள் எடுத்த காட்சிகள் காணமல் போய்விட்டது. ஆயிரக்கணக்கான பேர் சூழ் 10 கேமராக்கள் மூலம் கிரிக்கெட் போட்டியை ஷூட் செய்தோம் என்றும் இவை அனைத்தும் காணாமல் போய்விட்டது என்றும் தெரிவித்தார்.
மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தொலைந்த ஹார்ட் டிஸ்க்கில் இருந்த காட்சிகளை எடுக்கலாம் என்று சொன்னார்கள். அது கடினம் என்பதால் இருக்கும் காட்சியை வைத்தே படத்தை எடிட்டிங் செய்ததாகவும் ஹார்ட் டிஸ்க் தொலையாமல் இருந்திருந்தால் நாங்கள் சொல்ல வந்த கருத்தை இன்னும் தெளிவாக எங்களால் கூற முடிந்திருக்கும்.
இந்த தவறுகளால் சில பாடங்கலை கற்றுக்கொண்டதாகவும் ஒரு இயக்குனராக தனக்கு பெரிய அனுபவமாக இருப்பதாக ஐஸ்வர்யா தெரிவித்திருக்கிறார். இதனை சிலர் பாராட்டியும், நீங்கள் செய்த தவறால் தான் தயாரிப்பாளர் கோடிக்கணக்கில் நஷ்டப்பட்டு தலையில் துண்டை போட்டிருக்கிறார் என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள்.