தாலி கட்டும் முன்பே ஷாலினிக்கு மனைவி அந்தஸ்த்தை கொடுத்த அஜித்.. உண்மையை உடைத்த பிரபலம்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றார் அஜித் குமார்.

ஷாலினிக்கு காதலை வெளிப்படுத்தும் முன்பே அஜித் மனைவி அங்கீகாரம் கொடுத்த ஒரு சம்பவத்தை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீஜா ரவி சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். தமிழின் முக்கிய நடிகைகளான தேவயானி, ரம்பா, ஷாலினி, சுவலட்சுமி உள்ளிட்ட பல நடிகைகளுக்கு டப்பிங் கலைஞராக திகழ்ந்து வந்தார்.
அப்போது அமர்களம் படத்தில் அவரை அஜித் சந்தித்தார். அப்போது, எனது மனைவி ஷாலினிக்கு நீங்கள் நன்றாக டப்பிங் கொடுக்கிறீர்கள் என்று கூறியது இன்று வரை பூரிப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மணம் முடிப்பதற்கு முன் ஒருவர் காதலி என்று தான் கூப்பிட்டு கேள்விப்பட்டிருக்கிறேன், அஜித்தின் மனைவி என்ற சொல் இன்னும் பிரம்மிப்படைய வைத்துள்ளதாக ஸ்ரீஜா ரவி தெரிவித்துள்ளார்.