8 மணிநேரம் அப்படி இருந்தால் நீ எப்போது வழப்போகிறாய்!! ஆலியா பட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த சத்குரு...
ஆலியா பட்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஆலியா பட், நடிகர் ரன்பீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து ஒரு மகளுக்கு தாயானப்பின்பும் நடிப்பில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். பல படங்களில் நடித்து வரும் ஆலியா பட், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களிடம் உரையாடியிருக்கிறார்.

அப்போது ஆலியா பட், ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் நீங்கள் தூங்குவீர்கள் என்ற கேள்வியை கேட்டுள்ளார்.
நீ எப்போது வழப்போகிறாய்
அதற்கு சத்குரு, கடந்த 27, 28 ஆண்டுகளாக வெறும் இரண்டரை முதல் 3 மணி நேரம் மட்டுமே தூங்கி வந்தேன். பின் மூளை அறுவை சிகிச்சைக்குப்பின் இந்த முறையில் மாற்றம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சையின்போது வழங்கங்கப்பட்ட மயக்க மருந்துகளில் தற்போது தூக்க நேரம் 4 முதல் 5 மணி நேரமாக அதிகரித்துள்ளது என்று கூறியிருக்கிறார்.

உடனே ஆலியா பட், நான் ஒரு நாளைக்கு 8 முதல் 9 மணி வரை தூங்குகிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு சத்குரு, இவ்வளவு நேரம் தூங்கிக்கொண்டே இருந்தால், நீ எப்போது வழப்போகிறாய் என்று பதிலளித்துள்ளார்.
இதற்கு பலரும் மருத்துவ ஆலோசனைப்படி மனிதர்கள் ஒருநாளைக்கு 8 மணிநேரம் தூங்குவது ஆரோக்கியமே என்ற கருத்துக்களை கூறி வருகிறார்கள்.