குழந்தை வேண்டாம் என்று அடம்பிடித்த அமலா பால்!! பகிர் கிளப்பும் பிரபலம..
நடிகை அமலா பால், தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். சிந்து சமவெளி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
அமலா பால், இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில காரணத்தால் விவகாரத்தில் முடிந்தது.
அதன் பின் அமலா பால் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர், சபிதா ஜோசப் அமலா பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், "நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்ட பின் சினிமாவில் நடிப்பேன் என்றும், குழந்தை எல்லாம் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் அடம் பிடித்தார். இதனால் தான் அவர்கள் விவாகரத்து செய்துகொண்டனர்".
"அதன் பின் அமலா பால், ஜகத் தேசாயை திருமணம் செய்துகொண்டார். இப்போது குழந்தை பெற்றுக்கொண்ட அவர், குழந்தை சற்று வளர்ந்த பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிப்பார்" என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ள கருத்து, அவரது சொந்த கருத்தே. இதற்கும் விடுப்பு பக்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.