பொணத்துடன் ஒரு வீட்டில் தனியாக சிவகார்த்திகேயனுடன் இருப்பேன்!! ஓப்பனாக பேசிய பிரபல நடிகை..
மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமாகி டாப் இடத்தினை பிடித்தவர்களில் ஒருவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தில் சர்ச்சையான ரோலில் நடித்தாலும் மைனா படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
டாப் நடிகர்களுடன் நடித்து வந்த அமலா பால் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்த சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் பார்ட்டி, ஆண் நண்பருடன் ஊர் சுற்றி வந்த அமலா பால் 2019ல் கடாவர் என்ற படத்தினை தயாரித்து நடித்தும் இருந்தார். சமீபத்தில் தன் காதலரை இரண்டாம் திருமணம் செய்து கர்ப்பமாகியிருக்கிறார் அமலா பால்.
இந்நிலையில் கடாவர் படத்தின் பிரமோஷனுக்காக ராஜு வீட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது என் அப்பா கொரானாவால் மரணமடைந்தார். அதிலிருந்து பிரேக் தேவைப்பட்டதால் 2 ஆண்டுகள் ஒதுங்கி இருந்தேன். இதனை தொடர்ந்து பிக்பாஸ் ராஜு அமலா பாலிடம், ஒரு இறந்த உடலுடன் இரவு முழுவதும் தனியாக இருக்கிறீர்கள்.
அப்போது எந்த நடிகரை துணைக்கு கூப்பிடுவீர்கள் என்ற கேள்வியை கேட்டிருக்கிறார். அதற்கு நடிகை அமலா பால், டெட் பாடியும் இருக்கும் போது கொஞ்சம் பயமா இருக்கும், அதனால் பொழுதுபோக்கிற்காக சிவகார்த்திகேயனுடன் இருப்பேன்.
சிவகார்த்திகேயனை எனக்கு முன்பே தெரியும். சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று அமலா பால் ஓப்பனாக பேசியிருக்கிறார்.