திருமணத்திற்காக அம்பானி மருமகள் இப்படியொரு வேலையை செய்திருக்காரா!! வெளியான தகவல்..
உலகளவில் அதிக பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி தன்னுடைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை 5000 கோடி செலவில் மிகப்பெரியளவில் பிரம்மாண்டமாக நடத்தினார். உலகம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக வியந்து பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்பட்டது.
பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் விதவிதமான ஆடைகள் அணிந்து சினிமா நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். அவர்களை அம்பானி வீட்டு மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவரின் ஆடை, நகைகள் முதல் மேக்கப் வரை பல கோடி செலவில் வடிவமைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் மனைவி ராதிகா திருமணத்திற்கு முன் தன்னுடைய பற்களை சரிசெய்ய ஸ்மைல் டிசைனிங் சிகிச்சை செய்துள்ளாராம். 2 ஆண்டுகளுக்கு முன் அவரின் புகைப்படத்தை பார்த்தால், முன் பற்களை சரி செய்ய வென்னியர் (Venneers) சிகிச்சை செய்திருக்கிறார்.
பல லட்சம் கொடுத்து அந்த பற்களை திருமணத்திற்காக ராதிகா மெர்ச்சண்ட் அழகை கூட்டியிருக்கிறார். அவரை போல் ஆனந்த் அம்பானியும் பல்லில் ஸ்மைல் டிசைனிங் செய்திருக்கிறார் என்று பிரபல மருத்துவர் பிரேம் கூறியிருக்கிறார்.