மார்ஃப்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படம்!! லீக்கானதால் நடிகை எடுத்த அதிரடி சம்பவம்
அனசுயா பரத்வாஜ்
தெலுங்கு திரையுலகில் சிறு கதாபாத்திரம் கிடைத்தாலே போது என்று நடிக்க வரும் பெண்கள் அதை பயன்படுத்தி எதாவது வாய்ப்ப்னை பெற்றுவிடுவார்கள். அப்படி சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து தற்போது தெலுங்கு திரைத்துரையில் முன்னணி தொகுப்பாளினியாகவும் திகழ்ந்து வருகிறார் அனசுயா பரத்வாஜ்.

சமீபத்தில் புஷ்பா படத்தில் வில்லனின் மனைவியாக நடித்த அனசுயா பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படம் வெளியாகியபோது அப்படத்தினை விமர்சித்து கருத்தினை போட்டுள்ளார். இதற்கு விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் அனசுயாவை ஆண்ட்டி என்று கலாய்த்தபடி இணையத்தில் டிரெண்ட்டாக்கினார்கள்.

மார்ஃப்பிங்
இதற்கு கண்டித்து அப்படி ஆண்ட்டி என்று கூப்பிடுபவர்கள் மீது புகாரளிக்கப்படும் என்று மிரட்டினார். இந்நிலையில் தன்னுடைய புகைப்படத்தை படுகேவலமாகவும் ஆபாசமாகவும் மார்ஃப்பிங் செய்து சிலர் புகைப்படங்களை லீக் செய்து வருவதாக புகாரளித்திருந்தார் அனசுயா பரத்வாஜ்.
ஆந்திர சைபர் கிரைம் போலிசார் விசாரித்ததில் ஆந்திர பசலபுடி கிராமத்தை சேர்ந்த ராம வெங்கடராஜு என்பவர் தன் ஆபாசா மார்ஃபிங் செய்து வெளியிட்டார் என்று கைது செய்துள்ளனர். அவரது லேப்டாப்பில் மேலும் சில நடிகைகளிம் மார்ஃபிங் புகைப்படங்களும் இருந்துள்ளது என கூறியுள்ளனர்.