ஆப்பு வைத்த விஜய் டிவி.. மூட்ட முடிச்சை கட்டிக்கொண்டு ஜீ தமிழுக்கு சென்ற தொகுப்பாளினி
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் மகாபா ஆனந்த், பிரியங்கா தேஷ்பாண்டே, திவ்யதர்ஷினி, ரக்ஷன், மகேஷ், மைனா, அர்ச்சனா என பல முன்னணி தொகுப்பாளர்கள் இருக்கிறார்கள்.
இதில் அர்ச்சனா விஜய் டிவிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு Mr and Mrs சின்னத்திரை சீசன் 3யில் தொகுப்பாளராக இருந்து வந்தார். மேலும், தற்போது கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் அவ்வப்போது தொகுப்பாளராகவும் இருக்கிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருந்த அர்ச்சனா தற்போது விஜய் டிவியில் நிலையான நிகழ்ச்சி இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில், தற்போது மீண்டும் ஜீ தமிழுக்கு தனது மூட்ட முடிச்சை கட்டிக்கொண்டு செல்லவுள்ளாராம் அர்ச்சனா.
ஆம், ஏற்கனவே தனது மகள் சாராவுடன் இணைந்து அர்ச்சனா தொகுத்து வழங்கி சூப்பர் மாம் நிகழ்ச்சியின் புதிய சீசன் ஜீ தமிழ் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை மீண்டும் தனது மகளுடன் இணைந்து அர்ச்சனா தொகுத்து வழங்கவிருக்கிறாராம்.
இதனால், தற்போது விஜய் டிவியில் இருந்து மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு செல்ல முடிவெடுத்துள்ளாராம் அர்ச்சனா. இதுக்கு பேசாம அந்த பறித்துமூட்டை குடவுன்லே இருந்துருக்கலாம்..