ஆடையின்றில் நடிக்க தயார்.. பணத்துக்காக நான் அதை பண்ணல!! பிரபல நடிகை ஆண்டிரியா ஓப்பன் டாக்.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற அந்நியன் படத்தின் பாடலை பாடி, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அதன்பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் பாடல்களை பாடியும் பிரபலமானார்.
ஆரம்பத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்து பின் லீக் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின் அவரை விட்டு பிரிந்த ஆண்ட்ரியா, படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பிசாசு 2, நோ எண்ட்ரி, ’கா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்தும் சில படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
இடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஆண்ட்ரியா வடசென்னை மற்றும் பிசாசு 2 போன்ற படத்தில் ஆடையின்றி சில காட்சிகளில் நடித்தது ஏன் என்றும் ஆடையின்றில் நடிக்க தயார் என்று கூறிய காரணம் என்ன என்றும் கூறியிருக்கிறார்.
நான் அப்படி கூறியதை பார்த்து பலரும் ஷாக்காகி விட்டார்கள். நான் ஒரு நடிகை என்பதால் அது என்னுடைய வேலை. அத்தோடு ஆடையில்லா காட்சிகளில் நடிக்க் நான் எதிர்ப்பார்ப்பது பணம் கிடையாது என்றும் பலரும் பணத்திற்காக இப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பார்கள். பணம் சம்பாதிக்க வேறுவழிகள் இருக்கிறது.
படங்களில் இப்படி நடித்த் தான் காசு சம்பாதிக்க வேண்டும் அவசியம் எனக்கு இல்லை என்று கூறியிருக்கிறார். ஆடையின்றி நடிக்க பணத்தை தாண்டி நல்ல காரணம் தேவை. கதையில் இப்படி ஒரு விசயம் நடக்கிறது என்றால் இப்படியான காட்சி அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் அதற்காக அந்த காட்சியை வம்படியாக திணித்தால் அது எனக்கு தெரிந்துவிடும்.
படத்தின் கதை
களத்திற்கு அந்த காட்சி அத்தியாவசியம் என்றாலும்
அதற்கான காரணத்தை அவர்கள் கொடுத்தாலும் நான்
நடிக்க தயாராக இருக்கிறேன் என்று ஓப்பனாக
பேசியிருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.