ஒரு வாரமாவது டைம் கொடுங்கடா! மீண்டும் சென்னைக்கு ரெட் அலர்ட்டா?

chennairains tnrains redalart
By Edward Nov 17, 2021 05:14 AM GMT
Report

கடந்த வாரம் தீபாவளி முடிந்த அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அதி கனமழை பெய்து வெள்ளத்தை ஏற்படுத்தியது. சென்னை பல இடங்களில் போட்டில் சென்றும் நீச்சல் அடித்து செல்லும் அளவிற்கு தண்ணீர் நின்றது.

இதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை இழந்தனர். தற்போது மீண்டும் அதையெல்லாம் சரிசெய்து பழைய நிலைக்கு வந்த நிலையில், தற்போது 18ஆம் தேதி சென்னை ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றத்தழுத்த தாழ்வு பகுதி காரணமாக 17, 18 தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறியநிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் கூறியுள்ளனர் வானிலை ஆய்வு மையம்.

இதனால் ஒரு வாரமாவது டைம் கொடுங்கப்பா என்று கதறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.