பாலகிருஷ்ணா டார்ச்சர் பண்ணுவார்!! நயன்தாராவிடம் அந்த மாதிரி நடந்துகொண்டார்..
நடிகை அஞ்சலி தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது.
அந்த நிகழ்ச்சியில், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணா கலந்துகொண்டார். அப்போது அவர் அமர்ந்து இருந்த இருக்கையில் ஒரு வாட்டர் பாட்டிலும், பக்கத்தில் இருந்த பாட்டிலில் மது நிறத்தில் திரவம் இருந்தது. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவியது.
அதுமட்டுமின்றி, நிகழ்ச்சியில் நின்று கொண்டு இருந்த அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளிவிட்டார். அந்த வீடியோ காட்சியும் வைரலானது. நடிகையிடம் பாலகிருஷ்ணா மோசமாக நடந்துகொள்கிறார் என்று அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன், பாலகிருஷ்ணா நயன்தாராவுடன் இணைந்து நான்கு படங்களில் நடித்துள்ளார். அஞ்சலிக்கு நடந்தது போல நயன்தாராவுக்கு நடக்கவில்லை. பாலகிருஷ்ணாவை பொறுத்தவரை தன்னை மதித்து நடந்துகொள்ள வேண்டும்.
ஷூட்டிங் சென்றவுடன் அவரது காலில் விழுந்து வணங்கிவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது. அப்படி எல்லாம் நடந்துகொண்டால் அவர் டார்ச்சர் செய்யமாட்டார். நிம்மதியாக நடிக்கலாம் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.