பிரபல நடிகரால் மேடையில் அசிங்கப்பட்ட நடிகை அனுபமா!! கத்தி கூச்சலிட்டு துறத்திய ரசிகர்கள்..
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் பிரேமம். குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய இப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகினார்கள். குட்டி பள்ளி சிறுமியாக நடித்து பிரபலமானார் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்த அனுபமா தமிழில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் அறிமுகமாகினார்.
அதன்பின் தள்ளி போகாதே படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சைரன் படத்தில் ஊமை பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனுபமா. இந்நிலையில் அனுபமா கடந்த ஆண்டு வெளியான ரெளடி பாய்ஸ் படத்தில் கதாநாயகனுக்கு லிப்லாக் மற்றும் நெருக்கமான காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.
அதற்காக சுமார் 50 லட்சம் சம்பளமாகவும் பெற்றிருந்தார் அனுபமா. தற்போது தெலுங்கு நடிகர் சித்து ஜொன்னலகட்டா நடிப்பில் டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில் அப்படத்தின் சக்சஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது.
நிகழ்ச்சிக்கு நடிகர் என் டி ஆர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். அப்போது நிகழ்ச்சியில் மேடையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் பேச சென்றுள்ளார். அவரை பேசவிடாமல் என் டி ஆர் ரசிகர்கள் கத்தியும் கீழே செல்லவும் கூறி கூச்சலிட்டுள்ளனர்.
இதனால் சங்கடப்பட்ட அனுபமா, 2 நிமிடமாவது பேசுறேன் என்று கெஞ்சி இருக்கிறார். அதை மீறியும் ரசிகர்கள் கூச்சலிட்டதால் என் டி ஆரை பாராட்டி நன்றி கூறிவிட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் தற்போது தெலுங்கு சினிமாவில் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
I did really feel bad for @anupamahere
— Vamc Krishna (@lyf_a_zindagii) April 9, 2024
here !! ??
It’s her event which she had to share her happiness on the success but these people over there were so rude that they didn’t allow/want her to talk!!
Despite all these still #Anupama was so sweet,she thanked NTR and spoke so… pic.twitter.com/Rt4LK2WTo3