கைவிட்ட தெலுங்கு இயக்குனர்கள்!! அந்த பக்கம் கரை ஒதுங்கும் 40 வயது இஞ்சி இடுப்பழகி..
தமிழ், தெலுங்கு என டாப் நடிகையாக திகழ்ந்து பல லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. சரியான உடல்வாகுவோடு காணப்பட்ட நடிகை அனுஷ்கா செட்டி, இஞ்சி இடுப்பழகி படத்திற்கு பின் உடல் எடையை அதிகரித்து படுமோசமாகிவிட்டார். அதன்பின் தன்னுடைய மார்க்கெட்டை இழந்ததோடு 40 வயதாகியும் திருமணத்தை ஒதுக்கி வருகிறார்.
பாகுபலி 2 படத்திற்கு பின் சினிமாவை விட்டே காணாமல் போன அனுஷ்கா கடந்த ஆண்டு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற தெலுங்கு படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார். செல்ஃபி படம் சொதப்பிய நிலையில் அப்செட்டாகிய அனுஷ்கா பெரிய நடிகர்களுடன் ஜோடி போடலாம் என்று பார்த்தால் இப்போதைக்கு யாரிடமும் சேரப்போவதில்லை என்ற முடிவில் இருக்கிறாராம்.
இந்நிலையில் நடிகர் ஜோதிகா எப்படி மலையாள பக்கம் சென்று பாலிவுட் பக்கம் சென்றாரோ அதேப்போல் அனுஷ்காவின் மலையாள பக்கம் ஒதுங்கியிருக்கிறார். மலையாள இயக்குனர் ரோஜின் தாமஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் காத்தனார் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் அனுஷ்கா.
கையில் கிருஷ்ணர் சிலையுடன்
அனுஷ்கா, இயக்குனர் மற்றும்
தயாரிப்பாளருடன் எடுத்துக்கொண்ட ஒரு
புகைப்படம் தற்போது வைரலாகி
வருகிறது. 42 வயதாகும் அனுஷ்கா
செட்டிற்கு மலையாளத்தில் ஆவது நல்ல
ஹிட் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்து
வருகிறது. காத்தனார் – தி வைல்ட்
சார்சரர் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த
படம் அருந்ததி, பாகமதி போல
பிரம்மாண்ட படமாக உருவாகவுள்ளதாம்.