மணிமேகலை பிரியங்கா விவகாரம்!! ரெண்டு பேரையும் விசாரிக்கணும்.. விஜய் டிவி அரந்தாங்கி நிஷா..
மணிமேகலை - விஜே பிரியங்கா
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன் நடந்த மணிமேகலைக்கும் விஜே பிரியங்காவிற்கு ஏற்பட்ட பிரச்சனை இன்று வரை பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விஜய் டிவி பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமாக விமர்சிக்கப்பட்டும் வருகிறது. அப்படி பேசக்கூடாது என்று வனிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் கோயம்புத்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அரந்தாங்கி நிஷா கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது குக் வித் கோமாளியில் நடக்கும் மணிமேகலை, பிரியங்கா பிரச்சனை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அரந்தாங்கி நிஷா
அதற்கு அரந்தாங்கி நிஷா, அந்த இடத்தில் நான் இல்லை, குக் வித் கோமாளியின் அன்றை ஷோவிற்கு நான் போகவில்லை, என்ன நடந்தது என்று எனக்கு உண்மையிலேயே தெரியாது. இரண்டு பக்கமும் விசாரிக்காமல் நான் எதுவும் சொல்லமுடியாது. இப்போது கூட பெண்களுக்காகத்தான் பேச வந்திருக்கோம்.
நிறைய பேர்மேல் எனக்கு பெரிய வருத்தம் என்னென்னா, ஒருத்தங்க தொழில் சார்ந்த குறையை கூறியிருக்கிறார்கள் என்றால் தொழில் சார்ந்தவற்றை மட்டுமே பேசவேண்டுமே தவிர, தனிப்பட்ட விஷயத்தை எடுத்து அந்த பெண்ணை எவ்வளவு இழிவுப்படுத்த முடியுமோ அதை செய்கிறீர்கள். அதை செய்ய வேண்டாம் என்று சொல்ல விரும்புகிறேன் என்று அரந்தாங்கி நிஷா தெரிவித்துள்ளார்.