வாய்ப்பினை தொலைத்த சூர்யா, கார்த்தி! இந்த இயக்குநரால் ஆர்யா செய்தது இதுதான்!
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராகவேண்டும் என்று பல படங்களில் நடித்து அந்த இடத்தை பெறாமல் இருந்தவர் நடிகர் ஆர்யா. பல படங்கள் வெற்றியை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரியலவில் காட்டாமல் இருந்து வந்த ஆர்யா சமீபத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டு விளையாட்டு கதைகளத்தில் நடிக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்தார்.
அப்படி வாய்ப்பு கொடுத்து தற்போது பெரியளவில் பேசப்படும் படம் தான் சார்பட்டா. பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி தற்போது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஓடிடி தளத்தில் வெளியாகி சார்பட்டா படத்தின் கதை சூர்யா மற்றும் கார்த்தி போன்றோருக்கு செல்லப் பட்டது.
இதையடுத்து, பா ரஞ்சித் படத்தில் நடித்தால் கண்டிப்பாக அந்த படம் எதார்த்தமாகவும், மக்கள் மத்தியில் நம்மை கொண்டு செல்லும் படமாகவும் இருக்கும் என நம்பித்தான் இந்த படத்தில் நடித்ததாக தெரிவித்துள்ளார் ஆர்யா. கடந்த சில வருடங்களாக ஆர்யாவின் படங்கள் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை.
ஆனால் கடைசியாக வெளிவந்த மகாமுனி, டெடி, சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் தொடர் வெற்றியை பெற்றுள்ளதால் அடுத்தடுத்து ஆர்யாவின் படங்கள் என்னவாக இருக்கும் என்பதை ரசிகர்களின் எதிர் பார்க்கும் நேரத்தில் அரண்மனை 3 வின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.