போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஒரு அப்பாவி..ஆதாரமே இல்லையாம்?

Shah Rukh Khan Gossip Today
By Edward May 27, 2022 09:38 AM GMT
Edward

Edward

Report

பாலிவுட் சினிமாவில் கிங்கான் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். தற்போது அட்லீ இயக்குனர் லயன் படத்தில் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படத்தின் இரு ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்தது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதாகி மீண்டும் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

அதேசமயம் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சொகுசு கப்பலில் பார்ட்டியில் ஈடுபட்டிருந்தார். அங்கு வந்த என்சிபி அதிகாரிகள் போதை பொருள் இருப்பதாக கூறி சோதனை ஈடுபட்டனர். அப்போது பலவித போதை பொருட்கள் கண்டெடுக்கபட்டு ஆர்யன் கான் உட்பட 20 பேரை கைது செய்தது.

பல மாதங்கள் இந்த வழக்கு இழித்தடித்து வந்துள்ளதாக கோபத்தில் என் குடும்பத்தினை இந்த அரசு பழி வாங்குகிறது என்று ஷாருக்கான் விமர்சித்தார். இதைதொடர்ந்து 6 ஆயிரம் பக்கம் குற்றப்பத்திரிக்கையை போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் தாக்கல் செய்திருந்தது.

இதனால் ஆர்யன் கான் முதன்மை குற்றாவாளியாக சேர்க்கப்பட்டது. இதனால் அவரின் மொபைல் போன் பறிமுதல் செய்து வாட்ஸ் அப்பில் சில விஷயங்கள் உண்மை என உறுதியானது.

ஆனால் போதிய ஆதாரம் இல்லை என்று போதை பொருள் தடுப்பு பிரிவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால் ஆர்யன் கானுக்கு இந்த வழக்கில் குற்றமற்றவர் என்று கூறி விடுவித்துள்ளது. இதனால் ஷாருக்கான் ரசிகர்கல் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். 

Gallery