ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மதுபோதை!! நம்பி காரில் ஏறி படாத பாடுபட்ட உதவி இயக்குனர்..
சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்கள் தற்போது பார்ட்டி கலாச்சாரத்தை அதிகரித்து வருவது பற்றி பிரபலங்கள் பலர் விமர்சித்து வருகிறார்கள். டாப் நடிகர்கள் முதல் இளம் நடிகைகள் வரை மது பார்ட்டி வைத்து கும்மாளம் போட்ட விஷயத்தை பற்றி தான் இணையத்தில் பெரியளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. அந்தவகையில் பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் அளித்த பேட்டியொன்றில், மறைந்த நடிகரின் மகன் செய்த ஒரு மோசமான சம்பவத்தை பகிந்துள்ளார்.
மறைந்த நடிகரின் பையன் முக்கியமான ஒரு நடிகராக இருக்கிறார். அவர் மகாபல்லிபுரம் ஷூட்டிங் நடந்துள்ளது. எப்போதும் ஷூட்டிங்கில் மதுபோதையில் இருப்பார். நடிக்கும் அளவிற்கும் டயலாக் பேசும் அளவிற்கும் தான் அவரது போதை இருக்கும். அவரிடன் கதை சொல்ல உதவி இயக்குனர் ஒருவர் சந்தித்து இருக்கிறார். ஷூட்டிங் முடிந்ததும் காரிலேயே கதைக்கேட்டு போலாம் என்று காத்திருக்க சொல்லியிருக்கிறார் அந்த வாரிசு நடிகரின் பையன்.
பின் ஷூட்டிங் முடிந்து இருவரும் காரில் சென்றுள்ளனர். ஏற்கனவே மதுபோதையில் இருந்து கார் ஓட்டி வந்துள்ளார். திடீரென அவரது காரை மற்றொரு கார் முந்தியுள்ளது. நம்ம காரை முந்துவாது என்று அந்த காரை ஜேஸ் செய்துள்ளார். உதவி இயக்குனர் பயந்து, இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே என்று நினைத்துள்ளார். திருவான்மியூர் பகுதியில் அந்த காரை ஜேஸ் செய்து சென்றிருக்கிறார்.
அதன்பின் கதை சொல்லவா என்று அந்த வாரிசு நடிகரின் மகனிடம் கேட்டுள்ளார் உதவி இயக்குனர். அந்த காரை முந்தியதால் சந்தோஷத்தில் ஒரு ஹோட்டலுக்கு காரை விட்டிருக்கிறார். அங்கு சரக்கு எடுத்து குடித்த போது, அந்த உதவி இயக்குனரிடம் நாளை வா என்று அனுப்பி வைத்திருக்கிறார். அந்த உதவி இயக்குனர் அடுத்த நாள் சென்றால் கதவையே திறக்கவில்லையாம் அந்த வாரிசு நடிகரின் மகன். 3 நாள் கழித்து வந்த அந்த நடிகர் ஆளே மாறி வந்ததை பார்த்து அங்கிருந்தே ஓடியிருக்கிறார் அந்த உதவி இயக்குனர் என்று அந்தணன் கூறியிருக்கிறார்.