ஒரு கப் அடிச்சு , இந்த அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வைங்க டா!! RCBயால் இப்படியொரு முடிவெடுத்த பெண்

Virat Kohli Royal Challengers Bangalore IPL 2022 Faf du Plessis
By Edward May 28, 2022 05:45 AM GMT
Edward

Edward

Report

ஐபிஎல் 15 வது சீசனில் இரண்டாவது எலிமினேஷன் போட்டி நேற்று பெங்களூர் அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் நடைபெற்றது. ஏற்கனவே குஜராத் அணி இறுதி போட்டிக்கு தேர்வான நிலையில் நேற்று யார் வெற்றி பெருவார் என்று எதிர்பார்திருந்தனர்.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. பேட்டிங் செய்த பெங்களூர் அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்து 158 டார்க்கெட்டினை ராஜஸ்தானுக்கு வழங்கியது.

சிறப்பாக ஆடிய பட்லர் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு பாதையாக அமைந்தார். இதனால் பெங்களூர் அணி இறுதி போட்டி வாய்ப்பினை இழந்தது.

இதனால் பெங்களூர் அணியை இணையத்தில் கண்டபடி விமர்சித்து வந்த நிலையில் ஆர்சிபி எணி கோப்பையை வெல்லும் வரை நான் திருமணம் செய்ய மாட்டேன் என்று ஒரு பெண்மணி எழுத்து பலகை மூலம் தெரிவித்துள்ளார்.

தற்போது அவரின் இந்த வார்த்தை தான் இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறது. இதனை பலர் கலாய்த்தும் வருகிறார்கள்.

Gallery