சூப்பர் ஸ்டார் பட நடிகைக்கு விமான நிலையத்தில் உடல் ரீதியாக தொல்லை! புகாரளித்த கணவர்
நடிகைகளுக்கு எங்கு போனாலும் ஏதாவதொரு வகையில் தொல்லைகள் ஏற்படும். அப்படி தன் மனைவிக்கு விமானத்தில் நடந்த பாலியல் தொல்லை குறித்து புகாரளித்துள்ளார் நடிகை ஆயிஷா தாகி. பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக இருக்கும் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வெளியான படம் வான்டட்.
பிரபுதேவா இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரியளவில் வெற்றி கண்டது. இப்படத்தை பிரபு தேவா நடிகர் விஜய்யை வைத்து போக்கிரி படமாக ரீமேக் செய்திருந்தார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆயிஷா தாகி.
ஆரம்பத்தில் இருந்தே க்ளாமர் குயினாக இருந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஆயிஷா மார்ப்பகத்தை அதிகரிக்க சிகிச்சை மேற்கொண்டு பேசப்படும் நடிகையாக மாறினார். அதன்பின் 2009ல் பர்ஹான் ஆஷ்மி என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார்.
அதன்பின் சிறுசிறு ரோல்களில் நடித்து வந்த ஆயிஷா கணவரின் தொழில் பிரச்சனையால் கொலை மிரட்டல்களை சந்தித்து வந்துள்ளார். தொழில் விசயத்தில் நண்பர் மீது புகாரளித்ததில் இருந்து இதுமாதிரியான மிரட்டல்கள் தன் மனைவி சாயிஷா தாகிக்கும் தனது தாய் மற்றும் சகோதரிக்களுக்கும் கொலை மிரட்டல்கள் வருவதாக பர்ஹான் ஆஷ்மி புகாரளித்திருந்தார்.
இந்த விஷயம் முடிவதற்கு முன் இன்னொரு சர்ச்சையான சம்பவத்தை கூறி புகாரளித்துள்ளார். கோவா விமான நிலையத்தில் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப்படையை சேர்ந்த அதிகாரிகள் தன் மனைவி சாயிச்காவிற்கு உடல் ரீதியாக துன்புறுத்தல்கள் கொடுத்து வந்துள்ளனர்.
மேலும் அப்படையை சேர்ந்த ஆயுதம் ஏந்திய அதிகாரி உடல் ரீதியாக தொட்டு சாயிஷாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனால் வாக்குவாதம் தொடங்கியது என்றும் கூறியுள்ளார்.
Altercation started when an armed male officer at the security desk tried to physically touch & tell my wife, son to stand in another line while all other families were standing together for sucurity.All I said to him is to dare touch any female her & maintain distance @CISFHQrs
— Farhan Azmi (@abufarhanazmi) April 4, 2022