மதுவுக்கு அடையாகி மூளையில்..ரகுவரன் மரணத்திற்கு இதுதான் காரணம்!! நடிகர் பப்லு ஓபன் டாக்..

Raghuvaran Gossip Today Death Babloo Prithiveeraj Tamil Actors
By Edward Jun 23, 2025 02:30 AM GMT
Report

 பப்லு பிரித்திவிராஜ்

90ஸ் காலக்கட்டத்தில் சிறந்த வில்லன் என்ற அனைவராலும் புகழப்பட்டு வந்த நடிகர் ரகுவரன் மறைவு குறித்து பல பலவிதமான காரணங்களை முன்வைத்து வருகிறார். சமீபத்தில் நடிகர் பப்லு பிரித்திவிராஜ் அளித்த பேட்டியொன்றில் ரகுவரனுடனான நட்பு குறித்தும் அவரின் மரணம் குறித்து சில தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில், ரகுவரன் எனக்கு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சீனியர், அங்குதான் எங்களின் நட்பு ஆரம்பித்தது. நாங்கள் இருவரும் ஏறக்குறைய ஒரே மாதிரித்தான் இருப்போம். அவர் என்னைவிட உயரமாக இருப்பார், ஆனால் கலர், ஸ்டைல் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும். என் கேர்ள் பிரண்டும், அவர் கேர்ள் பிரண்டும் பெஸ்ட் பிரண்ட்.

மதுவுக்கு அடையாகி மூளையில்..ரகுவரன் மரணத்திற்கு இதுதான் காரணம்!! நடிகர் பப்லு ஓபன் டாக்.. | Babloo Gets Emotional Talking About Raghuvaran

ரகுவரன்

அதோடு எங்கள் கேர்ள் பிரண்டு இருவரும் பெரிய பணக்காரர்கள். நாங்க ரெண்டுபேரும் பயங்கர ஜீரோ பேலன்ஸ் ஆளுங்க. ரகுவரன் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி மூளையில் இருக்கும் நினைவு பகுதி செயலிழந்து தான் அவர் இறந்துப்போனார்.

அவரை திருத்துவதற்காக நான் முயற்சி செய்தபோது உன்னுடைய வேலை எதுவோ அதை மட்டும் பார் என்று சொல்லிவிட்டார் என்று பப்லு பிரித்திவிராஜ் தெரிவித்துள்ளார்.