எங்க போனாலும் அடிமேல் அடிதான்! அசிங்கப்பட்ட பயில்வான்
நட்சத்திரங்களின் அந்தரங்க மற்றும் தனிப்பட்ட விசயத்தை கூச்சமில்லாமல் அவதூறாக பேசி வருகிறார் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன். எம்ஜிஆர்,ரஜினிகாந்தில் ஆரம்பித்து இளம் நடிகைகள் வரை அவர்களின் அந்தரங்க விசயங்களை வெளியுலகத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.
இதற்கு ஆண் பெண் பிரபலங்கள் கூட எதிர்த்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதற்கு ஒருமுறை நடிகை ராதிகா சரத்குமார் கூட தன்னை அசிங்கப்படுத்தி பேசியதாக கூறி பயில்வானை கடற்கரை பக்கத்தில் அடித்துள்ளார்.
மேலும் பத்திரிக்கையாளர்கள் கூட பயில்வானை விமர்சித்து தான் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். தற்போது இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் பற்றி நிர்வாண காட்சியில் நடித்ததை பற்றி பேசியிருக்கிறார் பயில்வான்.
இதை ரேகா நாயர் கடற்கரையில் படுகேவளமாக திட்டி அசிங்கப்படுத்தியிருக்கிறார். இதற்கு பயில்வான் ரேகா நாயர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் மீது போலிஸில் புகாரளித்துள்ளார்.